வடக்கில் பெற்றோல் கொள்வனவு மந்தம்! – ‘கியூஆர்’ முறையால் வந்த விளைவு.

நாள் ஒன்றுக்கு 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கக் கூடிய இயலுமை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு உள்ளபோதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனவு செய்வதற்கு பின்னடிக்கின்றன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வட பிராந்தியக் கிளையினர் தெரிவித்தனர்.

‘கியூஆர்’ குறியீட்டு முறைமைக்கு அமைவாக எரிபொருள் வழங்கலை மேற்கொள்ளாத 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குள் வடக்கில் எந்தவொரு நிரப்பு நிலையமும் உள்ளடங்கவில்லை .

நாள் ஒன்றுக்கு 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான பெற்றோல் விநியோகிக்க முடியுமாக இருக்கின்றபோதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனவில் ஆர்வம் செலுத்தவில்லை.

‘கியூஆர்’ குறியீட்டுக்கு அமைய விநியோகம் நடைபெறுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனவு செய்த பெற்றோல் தேங்கியுள்ளமையாலேயே இவ்வாறு அவை கொள்வனவில் ஆர்வம் செலுத்தாமைக்கு காரணம் – என்றும் வட பிராந்தியக் கிளையினர் சுட்டிக்காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.