‘மே 09’ வன்முறைச் சம்பவங்கள்: மேலும் 31 பேர் சிக்கினர்!

காலிமுகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

குறித்த 31 பேரில் அறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, ‘மே 09’ வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 3 ஆயிரத்து 553 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.