காணி விவகார மோதல்: மகனைக் கொலைசெய்த தந்தை!

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி தந்தையால் மகன் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் காலி – பிட்டிகல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

40 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளார். 62 வயதுடைய தந்தையே அவரைக் கொலை செய்துள்ளார்.

காணி விவகாரம் தொடர்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பல நாட்களாக ஏற்பட்டு வந்த வாக்குவாதமே இந்தக் கொலைக்கான காரணம் என்று பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.