கோட்டா நாடு திரும்புவதால் ரணிலுக்குக் கடும் நெருக்கடி எனினும் அவர் துணிச்சலுடன் சமாளிப்பார்.

சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார். இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை, அவருக்குத் தலைவலியை ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இதற்குச் சில காலங்கள் எடுக்கலாம்.

இதற்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு பக்கங்களில் இழுத்துக்கொண்டிருக்கின்றன.

இதன்போது இரண்டு பாரிய நாடுகளுக்கிடையில் கொழும்பு இறுக்கமான கயிறு நடையை நடத்துகின்றது.

இதனையெல்லாம் ரணில் விக்கிரமசிங்க சமாளித்துக்கொண்டிருக்கும்போது போதாக்குறைக்குக் கோட்டாபயவும் நாடு திரும்புகின்றார்.

கோட்டாபயவுக்காக ரணில் என்ன செய்தாலும் விமர்சிக்கப்படுவார்.

பொதுமக்களில் பெரும்பாலானோர் ரணிலைக் கோட்டாவின் மனிதராகவே கருதுகின்றனர்.

எனவே, ரணில் துக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அவர் ஒரு புத்திசாலி அரசியல்வாதி. இந்தத் தந்திரமான பிரச்சினையைத் துணிச்சலுடன் சமாளிப்பார்” என்று இந்திய ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.