சேனாதி குருகேவுக்கு மறியல்!

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளரான சேனாதி குருகே எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

காலிமுகத்திடல் பேராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான போராட்டத் தேசிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சேனாதி குருகே மத்திய குற்றவியல் விசாரணை அலுவலகத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

இரண்டு இராணுவத்தினரைக் கடத்திச் சென்று தாக்குல் மேற்கொண்டதாகவே சேனாதி குருகே மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.