வடமராட்சி செல்வச்சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்!

வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ். வடமராட்சி – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (27) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

செப்டெம்பர் 8 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் 9 ஆம் காலை 9 மணிக்குத் தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

செப்டெம்பர் 10 ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும், அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், மறுநாள் 11 ஆம் திகதி பூக்காரர் பூஜையும் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.