நில்வள கங்கையில் காதலன் மாயம்: காதலி தற்கொலை!

மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல்போன இளைஞரின் காதலி நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காணாமல்போன மனுஷ்க யோஹான் என்பவரின் காதலியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்புருபிட்டிய, மீபாவிட்ட, ரன்சகொட பிரதேசத்தில் வசித்து வந்த அஷானி ஹன்சிகா என்ற 19 வயதுடைய யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை தேடுதல் நடவடிக்கையின்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாத்தறை, பிட்டபெத்தர, நில்வள கங்கையில் நேற்று நீராடச் சென்று காணாமல்போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்களைக் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரினால் இன்று கண்டெடுக்க முடிந்தது.

எனினும், காணாமல்போன மனுஷ்க யோஹான் என்ற இளைஞரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.