யாழில் ஹெரோயின் வியாபாரி சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தார் எனத் தேடப்பட்டு வந்த 27 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயினை விற்பனை செய்ய முயன்ற வேளை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும், ஒரு இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டது என்று பொலிஸார் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.