அக்கரைப்பற்றில் ஹெரோயினுடன் இருவர் கைது!

அக்கரைப்பற்றில் இரு வேறு இடங்களில் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று – வெள்ளப்பாதுகாப்பு வீதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைக்கப்பட்ட இராசியத் தகவலின்படி குறித்த பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார் நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 35 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கரைப்பற்றில் மற்றுமோர் இடத்தில் 45 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு சந்தேகநபர்களும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.