குட்டித் தேர்தலை மார்ச்சுக்குள் நடத்த எதிர்பார்ப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2018ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் காலம் 2022ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்துக்கமைய அதன் காலம் 2023ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி சபைகளுக்குச் செப்டெம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இம்முறை அந்தத் தொகை 8 முதல் 10 மில்லியன் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.