சாலையோர கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து.. வயநாட்டில் கோர விபத்து

கேரள மாநிலம் வயநாட்டில், பழைய வைத்திரி என்னும் பகுதியில் இன்று காலை 9:30 மணி அளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. கோழிக்கோடு மாவட்டத்திலிருந்து சுல்தான்பத்தேரி நோக்கி வந்த fantasy என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் பழைய வைதிரி பகுதியில் வரும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஒர கடைக்குள் புகுந்துள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 33 பயணிகளும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு மேம்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து இதுகுறித்து வயநாடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அதிவேகத்தால் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்த பொது மக்களும் அதிவேகத்தால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.