வாகரையில் புலிகளின் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்திருந்த பகுதியில் நிலத்துக்குள் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை இன்று விசேட அதிரடிப் படையினர் மீட்டனர் என்று வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன் முன்னிலையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.