வன்னியசிங்கத்தின் நினைவு தினம் இன்று! – நீர்வேலியில் அஞ்சலி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் குமாரசாமி வன்னியசிங்கத்தின் 53 ஆவது நினைவு தினம் இன்றாகும். இதையொட்டி யாழ்ப்பாணம் – நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு இன்று மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கப் பங்களித்த முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கிய வன்னியசிங்கத்தின் இந்த நினைவு தின நிகழ்வில் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேவேளை, இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.