நீரழிவு நோயாளிகளுக்கு குட் நியூஸ் – மலிவு விலையில் மாத்திரை அறிமுகம் செய்த மத்திய அரசு

நீரிழிவு சிகிச்சையில் பயன்படும் மாத்திரைகளின் விலையை கடுமையாகக் குறைத்து மலிவு விலைகளில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீரிழிவு குறைபாடு கொண்டவர்களுக்கு ‘சிட்டாகிளிப்டின்’ 50 மில்லி கிராம் கொண்ட 10 மாத்திரை 60 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மாத்திரை 100 மி.கி., 10 மாத்திரை 100 ரூபாய்க்கு கிடைக்கும்.

இதேபோல் சிட்டாகிளிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைட் கலந்த 50 மி.கி., மற்றும் 500 மி.கி., 10 மாத்திரை 65 ரூபாய்க்கும், 1000 மி.கி., கொண்ட 10 மாத்திரை 70 ரூபாய்க்கும் விற்கப்படும். நீரிழிவு குறைபாடு உடையோர் தற்போது, 162 முதல் 258 ரூபாய் வரை செலவு செய்து 10 மாத்திரைகள் வாங்குகின்றனர்.இந்த மலிவு விலை மாத்திரைகள், பிரதமர் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.

நாடு முழுதும் 8,700 இடங்களில் செயல்படும் இந்த மருந்தகங்களில், குறைக்கப்பட்ட விலைகளில் 1,600க்கும் மேற்பட்ட மருந்துகள், 250 மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, ஒரு சானிட்டரி நாப்கின் ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.