கோப்பாயில் ஹெரோய்னுக்கு அடிமையான 3 ஆண்களால் 15 வயதுச் சிறுவன் துஷ்பிரயோகம்!

யாழ்., கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 25 க்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் மூவரால், அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

மாலை வேளையில் சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று மூவரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முறைப்பாட்டை மீளப்பெறுமாறு சிறுவனின் தாயாருக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அழுத்தம் – மிரட்டல் விடுக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.