யாழில் ஹெரோய்னுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவனால் 7 வயதுச் சிறுமி வன்புணர்வு!

யாழ். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுயொன்றில், உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார்.

அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 14 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்தத் தகவல் தற்போதே ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.