பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்துக்கு முன்பாக கையெழுத்துத் திரட்டும் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் போராட்டம் நாளை காலை களுத்துறையிலும், அதைத் தொடர்ந்து காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.