புதுச்சேரியில் 10 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்: சுகாதாரத்துறை

புதுச்சேரியில் 10-க்கும் பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,267 பேருக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் எச்1 என்1 பரிசோதனை மேற்கொண்ட பெரியவர்கள் 10 பேருக்கு இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.