போராட்டம் நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் அனுமதி.

போராட்டம் நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு நகரம் உட்பட பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளதாக அவர் அங்கு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.