மட்டக்களப்பில் மக்களின் பேராதரவுடன் PTA இற்கு எதிராகக் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு – ஆரையம்பதியில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் தலைமையில் இந்தக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.