ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்!

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சற்று முன்னர் அவசர வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக நேர சம்பளத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக இன்று (30) இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்கங்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.