அரசில் இணைய முன் மைத்திரி துமிந்தவை சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவை , அக் கட்சியின் அரசியல் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விரைவில் அரசில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அமைச்சரவையில் துமிந்த திஸாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அவ்வாறான அமைச்சுப் பதவியைப் பெற்றால், கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி, மத்திய குழு உறுப்புரிமை, அநுராதபுரம் மாவட்டத் தலைமைப் பதவி என்பவற்றை அவர் இழக்க நேரிடும்.

Leave A Reply

Your email address will not be published.