யாழ். பொது நூலகத்தில் அப்துல் கலாமின் பிறந்த தின நிகழ்வு!

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணிக்கு யாழ். பொதுசன நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்தியத் துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.