திலினி பிரியமாலியின் வர்த்தக பங்குதாரரான முன்னாள் காதலன் கைது! (பிந்திய இணைப்பு)

கோடிக்கணக்கான நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வர்த்தக பங்காளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இசுரு பண்டார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

9 மணி நேரம் வாக்குமூலம் பெற்ற பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

பிந்திய இணைப்பு

திலினி பிரியமாலியின் கணவர் போல் நடித்து பலகோடி ரூபாய் மோசடி செய்த இசுரு பண்டாரவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் .

இசுரு பண்டார பிரியமாலியுடன் சேர்ந்து கணவர் போல் நடித்து இந்த வியாபாரத்தை நடத்தி வந்தார், அவளுடைய அனைத்து மோசடி பரிவர்த்தனைகளையும் இயக்கினார்.

2012 ஆம் ஆண்டு, இசுரு பண்டார மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவுடன் இருந்தார். அவர் மேர்வின் சில்வாவின் செயலாளராகவும், மெய்ப்பாதுகாவலராகவும், அவரது பல தவறான செயல்களுக்கு ஆதரவாளராகவும் இருந்தார்.

பின்னர், மேர்வின் சில்வா தனது அதிகாரத்தை இழந்தவுடன், அவரிடமிருந்து விலகியிருந்த இசுரு பண்டார, திலினி பிரியமாலி என்ற பெண்ணின் கணவராக மீண்டும் தோன்றினார்.

நீண்ட விசாரணையின் பின்னர் இசுரு பண்டார கைது செய்யப்பட்டதாக  புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.