3 தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையிலையே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான மீனவர்களையும் அவர்களின் படகையும் மேலதிக நடவடிக்கைக்காகக் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.