உயிர்கொல்லி ஹெரோயினுடன் 24 பேர் கைது! – எஸ்.ரி.எப். அதிரடி.

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போது உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்

கொழும்பு, யாழ்ப்பாணம், மொனராகலை, அநுராதபுரம், வவுனியா, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு நாட்களில் (24, 25) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.