அரசியல் தீர்வு வேண்டும்! – நெடுங்கேணியில் மக்கள் போராட்டம்.

‘கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பால் நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்றிட்டத்தில் 96 ஆவது நாளான இன்றைய போராட்டத்தில் தமது கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் நிறுத்து”, “வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”, “வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஓர் ஜனநாயக உரிமை” உள்ளிட்ட பல வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.