நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு!

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர் குறித்த வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற நெடுங்கேணி பொலிஸார், விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் கைக்குண்டை மீட்டெடுத்ததுடன், அதைச் செயலிழக்கச் செய்துள்ளனர்.

இந்தக் கைக்குண்டானது யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஜே.ஆர். வகைக்குண்டு என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.