நேரடிப் பேச்சு மூலம் தமிழர்களுக்குத் தீர்வு நாடாளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு.

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நேரடிப் பேச்சு ஊடாகத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், காணாமல்போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சு ஊடாகவே தீர்வு காண முடியும்” என்றும் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்த்துள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.