வீதியால் நடந்த சென்ற தந்தையையும் மகளையும் மோதிச் சாகடித்த கார்!

வீதியால் நடந்து சென்ற தந்தையும் மகளும் கார் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மீரிகம, பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி நேற்று மாலை பயணித்த கார் மோதியதில் இவர்களிருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

54 வயதான தந்தையும் 14 வயதான மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளைத் தந்தை வீட்டுக்கு அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.