ஜப்பானிய வாகனங்கள் மீண்டும் இறக்குமதிக்கு தயார்..

மிக விரைவில் மீண்டும் ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் அந்நாட்டு வாகன இறக்குமதியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் பல தடவைகள் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் சுதந்திர வர்த்தகம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.