ரணிலை கொண்டு வந்தது நாங்களா?.. மொட்டு தலைவர்கள்தானே?..- பிரசன்ன அதிரடி

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு கட்சி தயாராக இருந்த போது, ​​அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதற்கு மொட்டு கட்சி செவிசாய்க்கவில்லை என பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுவின் தலைவர்களே அன்றி தானும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர் அதற்கு ஆதரவளிப்பதையே தானும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்ததாகவும் தெரிவித்தார்.

தாம் ரணிலுக்கு வால் பிடிக்கப் போவதில்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்கு தான் வால் பிடிக்கப் போவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்துகிறார்.

உடுகம்பல பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ,

“ஜனதா விமுக்தி பெரமுன , 71ல் இடதுசாரி அரசியல் கட்சியான திருமதி சிறிமாவோ அரசாங்கத்தைப் பெற்ற பிறகு, ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சி செய்து அன்றைய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது. அன்று ஜே.ஆரை அழைத்தார்கள். ஜெயவர்தனவுடன் இணைந்தார். ஜே.ஆருடன் இணைந்து. ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை நிறுவ உழைத்தார்கள். ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய இராணுவம் கொண்டுவரப்பட்டபோது அதை சுதந்திரப் பிரச்சினையாக்கி ஜே.ஆரை எதிர்த்து, பிரேமதாசவை வெற்றிபெற உதவினார்கள். பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர். 88/89 தேர்தல் நேரத்தில் இந்த நாட்டில் நடந்த பயங்கரம் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெற திருமதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்தார்கள். அவர்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் வகித்தனர். அதன் பின்னர் மகிந்தவின் வெற்றிக்காக உழைத்தார்கள். அதைச் செய்தவர்களின் வரலாற்றைப் பார்க்கும் போது, ​​நாட்டில் 71 கிளர்ச்சி, 83 கறுப்பு ஜூலை, 88/89 பயங்கரவாதம் போன்ற காலங்களில் அரச சொத்துக்களை அழித்து மக்களைக் கொன்றனர், அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தன.

அதன் பிறகு, சுனாமி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நம் நாட்டின் பொருளாதாரம் இன்றைய நிலைக்குச் சென்றது. கோவிட் தொற்றுநோய்களின் போது தடுப்பூசி போடப் போகும் போது நீங்கள் என்ன சொன்னீர்கள்? ஆண்களுக்கு தடுப்பூசி போட்டால் ஆண்மை குறையும் என்றும் குழந்தை பிறக்காது என்றும் வாய்வழியாக செய்தி அனுப்பப்பட்டது. இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர். உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி நாடு மீண்டும் திறக்கப்பட்ட போது, ​​சில தொழிற்சங்கங்கள் நாடு இன்னும் பாதுகாப்பாக இல்லை, நாட்டை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறியது. நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பவர் எவராவது வந்து இந்த நாட்டை பொறுப்பேற்க முன்வாருங்கள் என்றோம். அப்போதும், ​​தம்பட்டம் அடித்த எவரும் நாட்டை பொறுப்பேற்க அஞ்சி ஒதுங்கி நின்றார்கள்.

அந்த நேரத்தில், கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களை கைப்பற்றினர். பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து மக்களை கொன்று குவித்து இந்த நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற ஒரு கூட்டம் முயற்சித்தது. அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டும் தான் முன்வந்து இந்த நாட்டை நான் பொறுப்பேற்கிறேன், அதற்கு மொட்டுவின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார். நான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை, நாட்டுக்கு உதவக்கூடிய முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும், என்னால் அவர்களுக்கு உதவ முடிந்தால், அதைச் செய்வேன். அதற்கு நாங்கள் சம்மதித்தோம். ஒன்றரை வருடங்களில் நாம் எடுத்த முடிவுகள் மக்கள் தீர்மானங்கள் அல்ல. இன்று பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை சிலர் விமர்சித்தாலும் எவராலும் மாற்று வழிகளை முன்வைக்க முடியாது. ஒன்றைச் செய்ய முடியாவிட்டால், இதைச் செய்ய வேண்டும் என்று சொல்ல இந்த அரசியல் தலைவர்களுக்கு அனுபவம் இல்லை.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டதை நான் எதிர்த்தேன். அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்கக் கூடாது என்றேன். இதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது நாங்கள் உதவி செய்தோம். எங்கள் கட்சியின் தலைவர்களான நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை தலைமைக்கு கொண்டு வந்தோம். அவருக்கு உதவ நாங்கள் குழுவை வழிநடத்தினோம். 2022 மே மாதத்திற்குள் நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள். நம் முன்னே பொருளாதாரத்தில் சரிந்த கிரீஸ் போன்ற நாடுகள் இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க தலைமைக்கு வந்தவுடனேயே அரசியலை இரண்டாவதாக வைத்து நாட்டைக் கட்டியெழுப்புமாறு அனைவரையும் அழைத்தார். யாரும் சேரவில்லை, விமர்சிப்பதை மட்டுமெ செய்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விரும்பினார். சிலருக்கு பிடிக்கவில்லை. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனியாக இருந்தார். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே எங்களின் ஆதரவை பெற்று நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வால் பிடிக்க நான் போகமாட்டேன். இந்த நாட்டு மக்களுக்கு நான் வால் பிடிக்கறேன் . ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்கள் என்னைப் போல யாரும் இல்லை. நான் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஒருவன்.

நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது நாட்டை மீட்டெடுத்த தலைவர் ஒருவர் இருந்தால் அந்த நபருக்கு நாம் எந்த அரசியல் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் உதவ வேண்டும். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ நாங்கள் குழுவாக ஒன்று சேர்ந்தோம். மக்கள்வாதிகளாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவி செய்கிறோம்.

அன்று மகிந்தவை போரில் வெற்றி பெற்ற நாயகன் என்றார்கள். இன்று மகிந்தவை கிழடு, கிழட்டு மைனா என அழைக்கிறார்கள். அடுத்ததாக, இந்தப் பெண்ணால்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என சந்திரிகா குமாரதுங்கவை முகநூலில் தாக்கி வருகின்றனர். கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் புகைப்படத்தை அவர்கள் வெளியிடுகிறார்கள். கிழவனிடமிருந்து இருந்து நாட்டைக் காப்பாற்ற, நாட்டை இளைஞர்களிடம் ஒப்படையும் என்கிறார்கள். 88/89 முதல் அனுபவமற்ற இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

கிழடுகள் என சொல்லும் போது இந்த நாட்டில் உள்ள எல்லா வயதானவர்களும் அடக்கம். புத்தாண்டு அன்று கூட பெற்றோரை பார்க்கச் சென்று வெற்றிலையுடன் சென்று பெரியோரை வணங்கி வருகிறோம். அந்த கலாசாரத்தை அல்லவா அழிக்க முயல்கிறார்கள் என தெரிவித்தார் பிரசன்ன ரணதுங்க.

Leave A Reply

Your email address will not be published.