வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்றது.

தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறி தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றையும், வலிகளையும் இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் செயற்பாட்டினை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் இன்று வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக வீதியால் சென்ற தமிழ், சிங்கள மக்களுக்கு முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், வலிந்து காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா – இலுப்பையடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில், பொதுமக்கள் பலர் உணர்வுபூர்வமாக வருகை தந்து கஞ்சி அருந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.