யாழ். புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பன கடமைகளைப் பொறுப்பேற்பு.
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய இடத்துக்குக் கொழும்பில் பணியாற்றி வந்த மாரப்பன அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
