பிரமிட் வியாபாரமும் போலி பட்டமும் நமது சமூகத்தை விட்டு விலகுவதாக இல்லை.

எவ்வளவு சொன்னாலும் பிரமிட் வியாபாரமும் போலி பட்டமும் நமது சமூகத்தை விட்டு விலகுவதாக இல்லை.

இந்த வியாபாரம் எப்படி இயங்குகிறது?

பார்ப்பதற்கும் ஒரு இலகுவான மாடலாக இருப்பதால் நிறைய பேரை இலகுவாக ஏமாற்றிவிட முடிகிறது. அதாவது நீங்கள் இருவரை சேர்க்க
வேண்டும் அந்த இருவரும் இரண்டு பேர் இரண்டு பேராக நான் நான்கு பேரைச் சேர்க்க வேண்டும். அந்த நான்கு பேரும் எட்டு பேரை சேர்ப்பார்கள் 8 பேரும் 32 பேரை சேர்ப்பார்கள் முப்பத்தி ரெண்டு பேரும் 64 பேரை சேர்ப்பார்கள். இவ்வாறு உங்களுக்கு கீழை ஒரு அணி வளர்ந்து கொண்டு செல்லும். அவ்வாறு வளரும் போது ஒவ்வொரு கட்டத்திலும் உங்களது வருமானம் அதிகரித்துக் கொண்டே போகும்.

இதுதான் மாதிரி.
இதில் உங்களை உள்ளீர்ப்பவர்கள்
உங்களுக்கு நல்ல தெரிந்தவராக இருப்பார்.

இந்த மாதிரியை சொல்லி, நீங்க பயப்படாம சேருங்க உங்களுக்கு ஆட்களை சேர்க்க முடியாவிட்டால் நான் உங்களுக்கு இரண்டு பேரை சேர்த்து தருவேன் என்பார்கள். உடனே உங்களுக்கு ரோஷம் வரும். இவர் எனக்கு இரண்டு பேரைச் சேர்த்துத் தருவதா?
“எனக்கு ரெண்டு பேரை சேர்க்கிறது கஷ்டமா” அப்படி நினைக்கும் போதே உங்களை அறியாமல் அந்த வியாபாரத்தினுள் போய்விடுவீர்கள்.

நீங்கள் உண்மையில் இரண்டு பேரை சேர்ப்பீர்கள் அவர்களிடம் உங்கள் நண்பர் சொன்ன அதே விடயத்தைச் சொல்வீர்கள் சிலவேளை அந்த ரெண்டு பேருக்கும் இன்னும் இரண்டு பேரையும் சேர்த்து கொடுக்கலாம்.

இப்பொழுது வியாபாரத்தை தொடங்கி விட்டீர்கள் விட்டுவிட முடியாத நிலைக்குச் சென்று விட்டீர்கள். நான்காவது அடுக்கிலேயே நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்வீர்கள்.

ஆனால் வெளியில் சொல்ல வெட்கத்தில் அதைத் தொடர்ந்து முன்னெடுத்து கொண்டே இருப்பீர்கள்.

இது சிறந்த வியாபாரம் ஏமாற்றம் எதுவும் இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்து கொண்டே இருப்பீர்கள். ஒருகட்டத்தில் உங்களுக்கு கீழே இருக்கும் கிளை முழுவதுமாக உடைந்து போகும்.
நீங்கள் முற்றுமுழுதாக ஏமாற்றப்பட்டு இருப்பீர்கள்.
நீங்கள் நம்பிக்கை வார்த்தை கொடுத்து சேர்ந்தவர்களுக்கு எதிரியாக இருப்பீர்கள்.

நீங்க யாரோ ஒருவரின் ஐந்தாவது ஆறாவது அடுக்கில் இருக்கும் ஒருவராக இருப்பீர்கள்.
அவர் இன்னொருவரின் கீழே இருப்பவராக இருப்பார்.

ஒவ்வொருவருக்கு கீழேயும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்படி பலரை சேர்திருக்கிறீர்கள்.

உலகம் பூராக இப்படி பத்தாயிரம் பேர் அவர்களுக்கே கீழே நான்கு அல்லது ஐந்து பேரைச் சேர்ந்து இருந்தால் 50 ஆயிரம் பேர் சேர்ந்து இருப்பார்கள். 50 ஆயிரம் பேரும் பத்தாயிரம் ரூபாய் முதலிட்டதாய் வைத்துகொள்ளுங்கள்.
மொத்தமாக சேர்ந்த பணம் எவ்வளவு?500,000,000 ரூபாய்.

இந்தப் பணம் யாருக்கு போகும் இந்த வியாபாரத்தை ஒரு குழு தொடங்கியிருக்கும்.

அந்தக் குழு எங்கே இருக்கின்றது யார் என்று யாருக்குமே தெரியாது.

ஆனால் நீங்கள் 50 ஆயிரம் பேரும் முதலிட்ட இந்த பெரிய தொகை அந்த குழுவுக்கு போய் சேரும்.

ஒரு கட்டத்தில் எல்லாம் தடைபட்டு முதலிடுபவர்களின் எண்ணிக்கை குறையும் பொழுது அந்தக் குழுவை சேர்ந்த பணத்தோடு எஸ்கேப் ஆகி விடும்.

அதாவது படங்களில் பார்த்திருப்பீர்கள் பினான்ஸ் கம்பனி மக்களை ஏமாற்றி கூடிய வட்டி தருகின்றோம் என்று சொல்லி பணத்தை போட வைத்து குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும் கம்பனி நஷ்டத்தில் போவதாக காட்டிவிட்டு சேர்ந்த பணத்தோடு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

நீங்கள் வாழ்க்கையில் பண ரீதியாக ஏமாற்றப் படாமல் இருப்பதற்கு நீங்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொண்டால் போதும்.

எப்பொழுது ஒருவன் நீங்கள் இலகுவாக பணம் சம்பாதிக்கலாம் என்று ஏதாவது ஒரு விடயத்தை சொல்ல தொடங்குகிறானோ, அந்தக் கணமே அது ஒரு ஏமாற்றும் முறை என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

பணத்தை ஒரே ஒரு விதத்தில் மட்டும்தான் இலகுவாக சம்பாதிக்கலாம், அது நீங்கள் இன்னொருவரை ஏமாற்றுவதன் மூலம். அதாவது அந்தப் பிரமிட் வியாபாரத்தில் தொடக்கப்புள்ளியில் இருப்பவரை போல நீங்கள் இருந்தால் மட்டுமே இலகுவாக பணம் சம்பாதிக்கலாம்.
இன்னொருவன் வழிகாட்டி நீங்கள் இலகுவாக சம்பாதிக்க முடியாது. இந்த ஒரு விடயத்தை உங்கள் மண்டையில் வைத்துக் கொள்ளுங்கள் எப்போதும் ஏமாற்ற படமாட்டீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.