பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!

பொல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் கண்டி மாவட்டம், பல்லேகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

61 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் குறித்த பெண்ணின் தலையில் பொல்லால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முறுகல் நிலையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.