IMF உடன் சென்ற நாடுகள் முன்னேறியது கிடையாது! – பிமல் ரத்நாயக்க

கடந்த முப்பது ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தம் செய்த 94-வது நாடு இலங்கை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த 94 நாடுகளில் 92 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் தோல்வியடைந்தன என்றும் அவர் கூறினார்.

உண்மையில், IMF உடன் சென்ற நாடுகள் முன்னேறியது இல்லை, அல்லது மிகக் குறைவான நாடுகளே முன்னேறியுள்ளன என்றும் அவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை சரியாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி நடத்திய உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.