சூடானில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து போராடியவர்கள் சுட்டுக்கொலை!

சூடானில் இராணுவம் நேற்று ஆட்சியைக் கவிழ்த்து, பிரதமர் மற்றும் அமைச்சர்களைச் சிறைப்பிடித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 07 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 140 பேர் காயமடைந்தனர்.

சூடானின் இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த ஆட்சியை அதிரடியாகக் கவிழ்த்து முழுமையாக இராணுவம் நேற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக், அவரது அமைச்சர்கள் சிலர் மற்றும் பல சிவில் சமூகத் தலைவர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து நேற்று பொதுமக்கள் வீதிகளில் இறங்கி, இராணுவத்தக்கு எதிராகப் பெரும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே போராட்டங்காரர்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக சுட்டதில் 7பேர் கொல்லப்பட்டதுடன், 140 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை, தலைநகர் கார்ட்டூமில் வீடு வீடாகச் சென்று உள்ளூர் போராட்ட அமைப்பாளர்களை இராணுவத்தினர் கைது செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தின் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அத்துடன், அமெரிக்கா அறிவித்திருந்த 700 மில்லியன் டொலர் நிதி உதவியும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் 30 வருடங்களாக பிரதமராக இருந்த உமர் அல் பஷீர் பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பதவி விலகினார்.

இதனையடுத்து சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை (Forces of Freedom and Change – FFC)என்று அழைக்கப்படும் இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த கூட்டமைப்பு இணைந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசில் அப்துல்லா ஹம்டொக் பிரதமராக பதவியேற்றார்.

எனினும் இடைக்க அரசு அமைக்கப்பட்டதில் இருந்து அதில் அங்கம் வகித்த இராணுவம் – மற்றும் சிவில் அரசியல் தலைவகளுக்கு இடையில் முரண்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. நாட்டின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான இராணுவத்தின் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

சூடானில் இராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி இராணுவ ஆதரவுக் குழுக்களால் கடந்த வாரம் ஆா்ப்பாட்டப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே நேற்று இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்த ஆட்சியை கவிழ்த்து இராணுவம் முழுமையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சூடான் ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் சா்வதேச ஆதரவு இருந்ததால் நிலைமையை ஓரளவு சமாளித்து வந்தது.இந்நிலையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் அங்கு பெரும் நெருக்கடி ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.