எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்படாது! – அரசு அறிவிப்பு

இலங்கையில் தற்போது எரிபொருளுக்குப் பற்றாக்குறை இல்லை எனவும், எதிர்காலத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவும் அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் 8 மாதங்களுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை 8 மாதங்களுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசலுக்கான ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்தார்.

அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய, சிங்கப்பூரின் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.