தமிழ் முற்போக்குக் கூட்டணி – ஐ.நா. அரசியல் துறைப் பணிப்பாளர் சந்திப்பு.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறைப் பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தது.

கூட்டணி பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், எம்.பி. உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சபையின் சார்பாக இலங்கையின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர்.

இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐ.நா. உலக உணவுத் திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டன.

இந்தச் சந்திப்பின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு, கூட்டணித் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு, தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் ஆராய விரும்புகின்றோம் என்று கொழும்பில் உள்ள ஐ.நா. காரியாலயம் விடுத்துள்ள அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.