யாழில் கிணற்றில் வீழ்ந்து இளைஞர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி – மூத்தவிநாயகர் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள கிணறில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று கிணற்றடியில் நின்ற போது நிலை தடுமாறி கிணற்றினுள் விழுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.