மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

மின்னேரிய, ஜயந்திரபுர பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வயல் ஒன்றில் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கணவன் மனைவி மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவரும் ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜயந்திபுர பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.