நாளை மறுநாள் திட்ட அமலாக்கத்துறை அமைச்சராகும் உதயநிதி? – ஆளுநர் மாளிகை ஒப்புதல்?

டிசம்பர் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அலுவலகம் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அமைச்சராக உள்ள உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் முழு வீச்சில் புதிய அறை தயாராகி வருவதாக புகைப்படங்கள் வெளியாகின.

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் டிசம்பர் 14 காலை 9:30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 400 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறை ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.