ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 444 சிறைக்கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து வந்த 444 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறு குற்றச் செயல்களில்; ஈடுபட்டவர்களும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குமே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், இவ்வாறு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 18 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 83 பேரும் மெகசின் சிறைச்சாலையிலிருந்து 6 பேரும் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 28 பேரும் குருவிட்ட சிறைச்சாலையிலிருந்து 35 சிறைகைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல்லேகல சிறைச்சாலையிலிருந்து 54 பேரும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகளுமாக சேர்த்து மொத்தமாக 444 சிறைக்கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.