இலங்கையில் 8 மணிநேரம் மின் தடை?

நிலக்கரி பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போனால், எதிர்வரும் காலங்களில் நாளாந்தம் 7 அல்லது 8 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுமார் 10 நிலக்கரி கப்பல்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதன் காரணமாக, அடுத்த ஆண்டு நிலக்கரி இல்லாமல்போகும் நிலை அதிகமாக உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதமளவில் இந்தப் பிரச்சினை மேலும் அதிகரித்து, பொறியியலாளர்கள் சங்கம் கூறுவதைப் போன்று, நாளாந்தம் 7 அல்லது 8 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.

எனினும், ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து எந்தவிதத்திலும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது. அவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராகச் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.