இராணுவம் கைதுசெய்த மகனைத் தேடி போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு.

இராணுவம் கைது செய்த மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாய் உயிரிழந்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்., புத்தூர் கிழக்கு, ஊரணிப் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத் தேடி போராட்டம் செய்த தாயாரே நோவாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அன்னார் தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு இறுதிவரை அவரது மகனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

தமது பிள்ளைகளைத் தேடிப் போராட்டங்களில் ஈடுபட்ட பல பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களது பிள்ளைகளைக் காண்பது என்பது அவர்களுக்குக் கடைசி வரை கனவாகவே அமைந்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.