“கிளப் வசந்த” கொலை குற்றவாளி பெலாரஸில் கைது: இலங்கைக்கு கொண்டுவருகிறார்கள்!

“கிளப் வசந்த” கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லத்துவஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா எனும் “லோகு பெட்டி , கிழக்கு ஐரோப்பிய ” பெலாரஸில் கைது செய்யப்பட்டு இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளார்.
இவர் பல கொலைகளைத் திட்டமிட்டதாகவும், அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. “கிளப் வசந்த” கொலை சம்பவத்தை வழிநடத்தியது இவர்தான் என்று நம்பப்படுகிறது.