சீதுவையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

சீதுவையில் ஆண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சீதுவை – கொட்டுகொடவில் இன்று இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 39 வயதான நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.