யாழ். புத்தூரில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிாிவுக்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தைப் பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாதரவத்தை – பொிய பொக்கணைப் பகுதியைச் சோ்ந்த 25 வயதான செ.ராகுலன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று ஆடு மேய்க்கச் சென்றிருந்த நிலையில் இன்று காலை வரையில் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடி தந்தை சென்ற போதே இளைஞர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

வலிப்புக் காரணமாக இளைஞர் உயிாிழந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது.

சம்பவம் தொடா்பில் அச்சுவேலிப் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.