யாழ். மாவட்ட செயலர் மகேசனுக்கு இடமாற்றம்?

யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க.மகேசன் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட செயலர்களுக்கான இடமாற்றத்துக்கு அமைவாக அவர் மாற்றலாகிச் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சு ஒன்றின் செயலாளராக அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லக் கூடும் எனத் தெரியவருகின்றது.

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய நா.வேதநாயகன், அரசியல் ரீதியான பழிவாங்கலால் இடமாற்றத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில், அவர் ஓய்வு பெற்றிருந்தார். இந்தநிலையில், மாவட்ட செயலராக க.மகேசன் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்று, கொரோனாப் பெருந்தொற்றுக்காலம், பொருளாதார நெருக்கடி நிலை போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மிகச்சிறப்பான பணியை யாழ்.மாவட்டத்துக்கு ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு புதிய செயலராக, தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலராகவுள்ள திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

Leave A Reply

Your email address will not be published.